×

கொரோனாவுக்காக வழங்கப்படும் ஸ்டீராய்டுகள்

நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!பல; ஸ்டீராய்டுகளின் பெயர்கள் இந்த பெருந்தொற்று நாட்களில் கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடையவையாகத் திகழ்கின்றன. அவை வைரஸால் பாதிக்கப்படும்; எவருக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஸ்டீராய்டு குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்பதைப் பார்ப்போம்…ஸ்டீராய்டு என்றால் என்ன?ஸ்டீராய்டுகள்; என்பது நம் உடலில் உள்ள இயற்கை ஹார்மோனைப் போன்றே மனிதர்களால்; உருவாக்கப்படும் ரசாயனங்களாகும். ஸ்டீராய்டுகள் அடிப்படையில் உடலில்; ஏற்படும் அழற்சியின் அளவைக் குறைக்க வடிவமைக்கப்பட்டன. உடலின் இயற்கை; நோயெதிர்ப்பு அமைப்பு எந்த வைரஸ், தொற்று அல்லது பாக்டீரியாவையும்; எதிர்த்துப் போராட முயற்சிக்கும்போது இது நிகழக்கூடும்.ஸ்டீராய்டுகள் ஏன் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கின்றன?ஸ்டீராய்டுகள்; கல்லீரல் இன்சுலினை எதிர்ப்பதைத் தூண்டுவதால் குளுக்கோஸ் அளவை; அதிகரிக்கின்றன. இதில் உடல் இன்சுலினுக்கு குறைந்த திறம்பட பதிலளிக்கிறது; மற்றும் இது அதிக ரத்த சர்க்கரை அளவுகளுக்கு வழிவகுக்கிறது.ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன வகையான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்?நீரிழிவு; நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது; நீரிழிவு இல்லாதவர்களில் ரத்தத்திலும் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே,; நீங்கள் நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டாலும் நீரிழிவுக்கான உணவு முறையைப்; பின்பற்ற வேண்டியது முக்கியமாகும். சில முக்கிய குறிப்புகள்* சிறிய அளவுகளில், உணவை சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள்.* அதிக புரதம், குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள், சர்க்கரைகள்,; கார்பனேற்றப்பட்ட பானங்கள், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,; கேனில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் போன்ற இனிப்பு பானங்களை தவிர்க்கவும்.* மாம்பழம், திராட்சை, பலாப்பழம் மற்றும் வாழைப்பழம் போன்ற உயர்; கிளைசெமிக் குறியீட்டு பழங்களுக்கு பதிலாக ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ்; பழங்களைத் தேர்ந்தெடுங்கள்.* புதிதாக தயாரிக்கப்பட்ட சாலட் உட்பட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 வேளை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.* உங்கள் இட்லி தோசை மாவில் அரிசிக்கு பதிலாக தினைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.எப்போதும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவை…* ஸ்டீராய்டுகளை திடீரென நிறுத்தக்கூடாது.* ஸ்டீராய்டுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.*; ஸ்டீராய்டுகள் ஒருபோதும் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.* இது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் நிறுத்தப்பட வேண்டும்.* நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி அனைத்து நோயாளிகளும் ஸ்டீராய்டுகளுடன் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நீரிழிவு சார்ந்தஉணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.* ரத்த குளுக்கோஸின் சுய கண்காணிப்பு மிகவும் முக்கியம்.;

The post கொரோனாவுக்காக வழங்கப்படும் ஸ்டீராய்டுகள் appeared first on Dinakaran.

Tags : Covid-19 pandemic ,
× RELATED கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் பீட்டா க்ளுக்கான்