×

கன்னட திரையுலகில் மீண்டும் பரபரப்பு: போதை பொருள் வழக்கில் மற்றொரு நடிகை சிக்கினார்

பெங்களூரு:  பெங்களூரு  கோவிந்த்புராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் விற்பனையில்  ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த  தாமஸ் என்பவருக்கு பெங்களூருவை சேர்ந்த நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும்  பலருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நைஜீரியாவில் இருந்து போதை  பொருளை வரவழைக்கும் இவர் கல்லூரி இளைஞர்களுக்கு மட்டுமின்றி கன்னட நடிகைகள்  மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு போதை பொருட்களை  சப்ளை செய்துள்ளார். இதற்கு கன்னட நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர்  உதவி செய்துள்ளனர்.  இது தொடர்பாக தாமஸ் என்பவர் கொடுத்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் பெங்களூரு நகர போலீசார் நேற்று 3 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஒருவர் கன்னட நடிகை சோனியா அகர்வால்.  இவருக்கு சொந்தமான ராஜாஜிநகர் குமார் ரோடு பகுதியில் உள்ள  வீடு மற்றும்  பென்சன் டவுனை சேர்ந்த டி.ஜே வச்சன் சென்னப்பா, பத்மநாபா நகரை சேர்ந்த  தொழிலதிபர் பரத் ஆகியோரின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். இதில்  பல்வேறு வகையான போதை மாத்திரைகள் கம்ப்யூட்டர்கள், மற்றும் எலக்ட்ரானிக்  பொருட்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் பரத், சோனியா அகர்வாலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். விசாரணைக்கு  அழைத்து செல்லப்பட்ட அவரை விரைவில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே இதேபோன்ற  ஒரு போதை பொருள் வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி, மற்றும் சஞ்சனா கைதாகி  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது  அவர்கள் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு நடிகை  சிக்கியிருப்பது, கன்னட திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. …

The post கன்னட திரையுலகில் மீண்டும் பரபரப்பு: போதை பொருள் வழக்கில் மற்றொரு நடிகை சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Kannatha ,Bangalore ,Bengaluru ,Covindbura ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...