×

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 1000 பாக்கெட் சாராயம் பறிமுதல்

சீர்காழி: மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி, எஸ்எஸ்ஐக்கள் முத்துகிருஷ்ணன், முருகன், ஏட்டு சதீஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை நடத்தியபோது, பைக்கில் ஆயிரம் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பைக்கில் வந்த நபர் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் வாழ்க்கை மேலதெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மாணிக்கவாசகம் (23) எனவும், காரைக்காலில் இருந்து சீர்காழி ஈசானிய தெருவில் வசிக்கும் திருபுரசுந்தரிக்கு பாக்கெட் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வைதீஸ்வரன் கோயில் போலீசார் மாணிக்கவாசகத்தை கைது செய்து, சாராய பாக்கெட் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும், ஈசானிய தெரு சாராய வியாபாரி திருபுரசுந்தரியை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பாக்கெட் சாராயத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்….

The post காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 1000 பாக்கெட் சாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Sirkazhi ,Manikanda Ganesh ,Gayatri ,SSIs Muthukrishnan ,Suragadu ,Mayiladuthurai ,SP Sugunasingh Uttara ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...