×

கையில் பணம் இல்லை; ‘மேலாடை’ கிழிந்துவிட்டது; கைதுக்கு பயந்து கதறும் நடிகை: மும்பை போலீஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு

மும்பை: ஆபாச பட வழக்கில் ேபாலீசாரால் தேடப்பட்டு வரும் பாலிவுட் நடிகை, மும்பை போலீசார் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்கள் தயாரித்து ஆப்ஸ் மூலம் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதற்கு முன்னதாக இதேபோன்ற ஆபாச விவகாரத்தில் கடந்த பிப்ரவரியில்,  பாலிவுட் நடிகை ஜூவல் வசிஷ்தாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நான்கு மாதங்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதனால், ராஜ் குந்த்ரா விவகாரத்தில் ஜூவலை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஜூவல், அதில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அவருடைய மேலாடை கிழித்துள்ளது. அவரது பதிவில், ‘இந்த அவல நிலைக்கு என்னை போலீசார் கொண்டு வந்துவிட்டனர். எனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. என்னிடம் கையில் பணம் இல்லை. என்னால் வீட்டுக்கு போக முடியாது. அப்படியே என்னுடைய வீட்டிற்குச் சென்றால், போலீசார் மீண்டும் என்னை கைது செய்வார்கள். என்னுடைய மொபைல் போன்களும், லேப்டாப்புகளும் கைப்பற்றிக் கொண்டனர். சிறையில் இருந்து வெளியே ஜாமீன் பெற்று வருவதற்காக, என்னுடைய காரை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனக்கு யார் என்றே தெரியாத சிலருடன் வாழ்கிறேன். அறிமுகம் தெரியாத நபர்கள் வீட்டில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். வழக்கறிஞருக்கான கட்டணத்தை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்தேன். மும்பை போலீஸ் என்னை இன்னும் என்னதான் செய்யப் போகிறது? இன்று எனக்கு கெட்ட நேரமாக இருக்கலாம். நாளை உங்களுடைய நேரம் மோசமாக இருக்கும். நீங்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறீர்கள். உண்மை ஒரு நாள் வெளியே வரும். என்னுடைய மொபைல் போனில் எல்லாம் இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டீர். இருந்தும் நான் இப்படியே இருந்துவிட மாட்டேன்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார்….

The post கையில் பணம் இல்லை; ‘மேலாடை’ கிழிந்துவிட்டது; கைதுக்கு பயந்து கதறும் நடிகை: மும்பை போலீஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mumbai police ,Mumbai ,Bollywood ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...