×

ஓமலூர் பகுதியில் மொத்தமாக ‘கள்’ வாங்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள்: தொண்டர்கள் குடிக்க ஏற்பாடு ; தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர், சேலம் மேற்கு, சங்ககிரி, இடைப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதியில் காவல்துறை அனுமதியுடன் கள் இறக்கி கட்சியினருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து, வாக்களர்களை கவரவும், தேர்தல் பணிகளில் கட்சி தொண்டர்களை ஈடுபடுத்தவும் தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும், அதிமுக சார்பில் கள் இறக்கும் நபர்களுக்கு, மொத்தமாக பணத்தை கொடுத்து, கள் குடிக்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதிகள் பனை மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு பனை தொழிலாளர்களும் அதிகமாக வசித்து வருகின்றனர். கள் இறக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் பனைமரகள் பானம் அதிகளவில் இறக்கப்பட்டு, அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓமலூர் உட்கோட்ட காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், இதற்கு போலீசார் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகவும் எதிர் கட்சிகள் சார்பில் புகார் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெளிப்படையாக, எந்தவித அச்சமும் இல்லாமல் பனைமரத்தில் பானைகள் கட்டி கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். அதனால், ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்திற்குட்பட்ட ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பனைமர கள் இறக்குவதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post ஓமலூர் பகுதியில் மொத்தமாக ‘கள்’ வாங்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள்: தொண்டர்கள் குடிக்க ஏற்பாடு ; தடுத்து நிறுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Salem District ,Salem West ,Sangakiri ,Eadpadi ,Dinakaran ,
× RELATED ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் 7 பேர் கைது