×

பிடியை இறுக்கும் போலீசார்!: நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு..!!

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை போலீசார் மற்றொரு வழக்கில் காவலில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகாரில் கடந்த 14ம் தேதி கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி இருவரது வழக்கிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாலும், சிறைக்கு சென்று மிக குறுகிய காலமே ஆவதாலும் ஜாமின் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜோ மைக்கேல் என்பவர் கடந்த ஆண்டு கொடுத்த கொலை மிரட்டல் புகாரில் சென்னை எம்.கே.பி. நகர் போலீசார் மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் 10வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் மூலம் மீரா மிதுன் விவகாரத்தில் பிடி இறுக்குவது உறுதியாகி இருக்கிறது. …

The post பிடியை இறுக்கும் போலீசார்!: நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Meera Mithun ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...