×

கொடநாடு விவகாரத்தைக் கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன்?.. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை; 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதத்தால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதாக புகார் கூறினார். காங்கிரஸ் உறுப்பினர் புகாரை மறுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 100 நாட்களுக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முறையாக நீர் வழித்தடங்களை சரி செய்திருந்தால் நீர் தேங்கியிருக்காது என செல்வப்பெருந்தகை கூறினார். நேற்று 2 மணி நேரம் மழை பெய்ததால் சென்னை தத்தளித்ததாக பழனிசாமி பேசியதற்கு உறுப்பினர் நந்தக்குமார் பதிலளித்தார். 2015-ல் 4 நாட்கள் அதிகாரிகள் காத்திருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அனுமதி கிடைக்கவில்லை. 4 நாட்களுக்கு பின் உபரிநீரை திறந்துவிட்டதால் சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கியது என செல்வப்பெருந்தகை குற்றம் சாடினார். இதற்கு பதிலளித்த பழனிசாமி; செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழ் உள்ள 100 ஏரிகளில் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சென்னையில் பெருவெள்ளம் என தெரிவித்தார். சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி பழனிசாமி பேசியதற்கு நிதியமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.இதற்கிடையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தொகை, சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதலமைச்சர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை; கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற விதமாக ஜெயக்குமார் ஏன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றால் எதற்காக அதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப வேண்டும்? எதற்காக ஆளுநரை சந்திக்க வேண்டும். கொடநாடு விவகாரத்தை நாங்கள் சட்டப்படி அணுகுகிறோம்; அதிமுகவைப் போல ஆளுநரை சந்திக்கவோ, பதற்றப்படவோ இல்லை. கொடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லாமல், அதிமுக பதறி அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்ப்பது ஏன். தமிழ்நாட்டின் ஆட்சி மையமாக திகழ்ந்த கோடநாட்டை மையமாக கொண்டு கொலை, கொள்ளை நடந்துள்ளது; நீங்களாவது எங்களுக்கு நீதி பெற்றுத்தாருங்கள் என சில அதிமுகவினர் என்னிடம் கூறினர் இவ்வாறு கூறினார். …

The post கொடநாடு விவகாரத்தைக் கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன்?.. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Koda ,Nadu ,Assembly Congress ,Selvaperundhai ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Koda Nadu ,Selvaperundagai ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...