×

600 கோடி பணமோசடி வழக்கு… சிறையில் உள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவருக்கும் உடல்நலக்குறைவு

புதுக்கோட்டை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை அடுத்த தீட்சிதர் தோட்டத்தில் வசித்து வரும் ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜக நிர்வாகி கணேஷும், அவரது சகோதரருமான சுவாமிநாதனும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை ஓராண்டில் இரட்டிப்பாக திருப்பி தருவதாக கூறி 600 கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சிறையில் உள்ள சாமிநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் புதுக்கோட்டை சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், தற்போது கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post 600 கோடி பணமோசடி வழக்கு… சிறையில் உள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவருக்கும் உடல்நலக்குறைவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dikshitar ,Kumbakonam Srinagar Colony ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...