×

மாணவன் தர்ணா

திருவொற்றியூர்: திருவொற்றியூர்  ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தீபக் (13), திருவொற்றியூர் பூந்தோட்டம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்த ராஜா, மகனுக்கு தனியார் பள்ளியில் கட்ணம் செலுத்த முடியவில்லை.  இதனால் அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதனால், நேற்று தனியார் பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் தர மறுத்ததால், மாணவனுடன் பெற்றோர் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்துக்குள் மாற்றுச்சான்றிதழ் தர பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது….

The post மாணவன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Rajeswari ,Deepak ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...