×

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான யூகங்கள், செய்திகளானது மிகுந்த மன வேதனை அளிக்கிறது : தலைமை நீதிபதி

டெல்லி : உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான யூகங்கள், செய்திகளானது மிகுந்த மன வேதனை தருவதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். புதிதாக 9 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதனை மறுத்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் தேவை என்பதை அனைவரும் அறிவார்கள். அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமனம் என்பது புனிதமானது என்றும் மிகுந்த கண்ணியமானது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.ஆனால் பணிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே கொலீஜியம் பரிந்துரைத்து இருப்பதாக செய்திகள் வெளியானது மிகுந்த மனவேதனை கூறியுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற யூகங்களால் தகுதி உடைய திறமையான நபருக்கு வாய்ப்பு கிடைப்பது பறி போகக் கூடும் என்றும் என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார். …

The post உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான யூகங்கள், செய்திகளானது மிகுந்த மன வேதனை அளிக்கிறது : தலைமை நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Delhi ,NV ,Ramana ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...