×

ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றமில்லை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் மாற்றமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும்  இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ராணுவத்தினர் பல வருடங்களாக ஆப்கானில் முகாமிட்டு அரசுப்படைக்கு ஆதராவாக இருந்து வந்தனர். இந்நிலையில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றப்பின் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து படிப்படியாக படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால், தலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி கடந்த சில நாட்களாக ஆப்கானின் முக்கிய நகரங்களை கைப்பற்றின. நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். முன்னதாக தலிபான்கள் காபூலை நெருங்கும்போதே அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும்  துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அதில், போரில் மக்களின் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன். 20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன். மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு” என பதிவிட்டார். இதனிடையே அமெரிக்காவில் ஆப்கானில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் மாளிகை முன் ஜோ பைடனுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதால் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது. தலிபான்களை ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது. ஆப்கன் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்கன் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்….

The post ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றமில்லை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,US President Joe Biden ,New York ,US ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்