×

ஆதனூர்-கரசங்கால் ஊராட்சியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

கூடுவாஞ்சேரி:  உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், ஆதனூர்-கரசங்கால் ஊராட்சி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சி டிடிசி நகரில் நேற்று நடைபெற்றது. இதில், ஆதனூர் ஊராட்சி கழக செயலாளரும், தொழிலதிபருமான டி.தமிழமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி தமிழமுதன், விவசாய அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன், மறைமலைநகர் நகர செயலாளர் ஜே.சண்முகம், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் எஸ்.ஆல்பர்ட் ஆகியோர் கலந்துகொண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஆதனூர்-கரசங்கால் ஊராட்சியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர், அவர்களிடம் கருத்துகளை கேட்டு, அனைத்து பதவிகளிலும் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன் உட்பட கிளை செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

The post ஆதனூர்-கரசங்கால் ஊராட்சியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adanthur ,Karasankal ,Dishagam ,Kanchipuram ,District ,Kundarathur Union ,Puradrakshi Dizhagam ,Loddishi Assembly Election ,Dinakaran ,
× RELATED ரயில் நிலையம், பிளாட்பாரம் அகற்றம் கிராமமக்கள் ரயில் மறியல்