×

பைக் மோதி விபத்து பெயின்டர் சாவு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பைக் மோதிய விபத்தில் பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார். பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(50), பெயின்டர். அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் சுதாகர்(41). நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் பாப்பான்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு உணவு தர ஒரே பைக்கில் சென்றனர். உணவு கொடுத்து விட்டு இருவரும் எதிர்திசையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மற்றொரு பைக் அவர்களை மோதி விட்டு சென்றது. இந்த விபத்தில் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சுதாகர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விபத்துக்கு காரணமான பைக்கில் வந்தவர்களை தீவிரமாக தேடுகின்றனர்….

The post பைக் மோதி விபத்து பெயின்டர் சாவு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Devendran ,Melmanampedu ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்