தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார். நேற்று தாக்கல் செய்யப்பட்டது போன்று வேளாண் பட்ஜெட்டும், மின் வேளாண் (இ-வேளாண்) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது….
The post இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.