×

முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நூதன முறையில் பண மோசடி: தாய், மகனுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானூர் பிரியதர்ஷினி நகரில் வசித்து வரும் 26 வயது இளம்பெண், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வில்லான்டர் பெனட்ராயன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில், பெனட்ராயன், திருமண செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண், தனது வங்கி கணக்கில் இருந்து மூன்றரை லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். இதன்பிறகுதான் பெனட்ராயனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் தெரியவந்ததும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது  உறவினர்களுடன் வில்லான்டர் பெனட்ராயன் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. ஆனால் அப்பொழுதுகூட தான் இரட்டைப்பிறவி தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாக ஏமாற்றினார்.    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஏப்ரல் 13ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி வில்லான்டர் பெனட்ராயன் அழைத்து போலீசார் விசாரித்தப்பின் ரூ.1 லட்சத்தை மட்டும் திரும்பக்கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது அந்த பெண்ணுக்கு பெனட்ராயன், `அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உன்னை ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 30ம்தேதி இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்படி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லான்டர் பெனட்ராயன் மற்றும் அவரது தாயார் சிலினாராயன் ஆகியோரை தேடி வருகின்றனர். …

The post முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நூதன முறையில் பண மோசடி: தாய், மகனுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Jattanur Priyadarshini ,Porur ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!