×

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முதல்கட்ட விரிவாக்க பணி

ராசிபுரம் :  சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அருகே ஏடிசி டிப்போ பகுதியில் மேம்பாலம் அமைக்க முதற்கட்டமாக சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, சாலைகளை கடக்க ஏதுவாகவும், விபத்துக்களை தடுக்க, பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் ராசிபுரம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு, ஏடிசி டிப்போ உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதிகளில் தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்குள் நடக்கிறது.இவ்விரு இடங்களில் விபத்துக்குளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது ராசிபுரம் டிப்போ பகுதியில் மேம்பாலம் அமைக்க, சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. …

The post சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முதல்கட்ட விரிவாக்க பணி appeared first on Dinakaran.

Tags : Salem-Namakkal National Highway ,Rasipuram ,ATC Depot ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...