டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீரர் எலியுட் கிப்சோகே (36 வயது) தங்கப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை (42 கி.மீ.) 2 மணி, 8 நிமிடம், 38 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். நெதர்லாந்தின் நகீயே அப்தி (2:09:58) வெள்ளிப் பதக்கமும், பெல்ஜியம் வீரர் பஷீர் அப்தி (2:10:00) வெண்கலமும் வென்றனர். மகளிர் மற்றும் ஆண்கள் மாரத்தான் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, நிறைவு விழாவின்போது நடத்தப்பட்டு தனி கவுரவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….
The post ஆண்கள் மாரத்தான் கிப்சோகே சாம்பியன் appeared first on Dinakaran.