×

யார் வந்தாலும் அரவணைப்போம்: இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான்..மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி.!!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 4 அணிகள் உருவாகியுள்ளது. திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒருபுறமும், மற்றொரு புறம் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதேபோல், சமத்துவ மக்கள்  கட்சி-மக்கள் நீதி மய்யம் கட்சி-ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அமமுக-ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும்  ஐஜேக தலைவர் ரவி பச்சமுத்துவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சமக தலைவர் சரத்குமார், தங்கள் கூட்டணியை முதல் கூட்டணி என்று அழைக்குமாறு கோரினார். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்று தெரிவித்தார். நல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார் என்றார். கமல்ஹாசன் பேட்டி: தேமுதிகவுக்கு பொன்ராஜ் அழைத்தது எனக்கு தெரியாது. கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என கமல் தெரிவித்தார். எல்லோர் மீதும் விமர்சனங்களை வைப்பேன். இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான். ஆளுங்கட்சியையும் நான் விமர்சித்து வந்துள்ளேன் என்றார். மேலும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.  ரவி பச்சமுத்து பேட்டி: எங்களது கூட்டணி தமிழகத்துக்கு விடிவெள்ளியாக இருக்கும். மக்கள் நீதி மய்யம், ஐ.ஜே.கே., சமக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணியால் தமிழகத்துக்கு மாற்றம் தர முடியும். தமிழக எதிர்காலம், மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார். ராதிகா சரத்குமார் பேட்டி:எங்கள் கூட்டணி முதல் கூட்டணி. எங்களது கூட்டணி விஸ்வரூபம் பெற்ற கூட்டணி. எங்களது கூட்டணி கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக அமையும் என்றார். …

The post யார் வந்தாலும் அரவணைப்போம்: இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான்..மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி.!!! appeared first on Dinakaran.

Tags : Maniema ,Kamalhasan ,chennai ,tamil nadu assembly ,Tamil Nadu ,2021 Assembly Election ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...