×

20 கிமீ நடையோட்டம்

ஒலிம்பிக்கில் 20கிமீ தொலைவை கடக்கும் நடையோட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் சந்தீப் குமார், ராகுல், இர்பான் ஆகியோர் பங்கேற்றனர். மற்ற 2  வீரர்கள் பின் தங்கியிருந்தாலும் 10கிமீ வரை சந்தீப் 2வது இடத்தில் தான் ஓடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு 12, 16வது இடத்துக்கு பின் தங்கிய சந்தீப் ஒரு மணி 25 நிமிடங்கள் 7 விநாடிகளில் இலக்கை தொட்டு ஓடி 23வது இடத்தை பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள்  ராகுல், இர்பான் ஆகியோர் முறையே  47, 51வது  இடங்களை பிடித்தனர். சுமார் 16கிமீ வரை முதலில் ஓடிக் கொண்டிருந்த சீன வீரர் கய்வூ வாங் 7 வது இடம் பிடித்தார். இத்தாலி வீரர்  மஸ்ஸிமோ(1:21:05) முதல் இடத்தை பிடித்தார். ஜப்பான் வீரர்கள் கோகி, டோஷிகாசு ஆகியோர் முறையே 2,3வது இடங்களை கைப்பற்றினர். போட்டியில் பங்கேற்ற 57பேரில்  52 பேர் மட்டுமே பந்தய தொலைவை கடந்தனர்.  மீதி 3 பேர் பாதியில்  விலக, 2 பேர் விதிகளை மீறியதால் தகுதியிழப்பு செய்யப்பட்டனர்….

The post 20 கிமீ நடையோட்டம் appeared first on Dinakaran.

Tags : Olympics ,Sandip Kumar ,Rahul ,Irban ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...