திருவொற்றியூர்: மணலியை சேர்ந்தவர் ராஜன்(40), கூலி தொழிலாளி. இவர், கடந்த மாதம் 26ம் தேதி மாலை மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது, அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மணலியை சேர்ந்த பாண்டியனுடன்(35) தகராறு ஏற்பட்டது. இதில் பாண்டியன் சரமாரியாக தாக்கியதில் ராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராஜன் உயிரிழந்தார். மாதவரம் பால்பண்ணை போலீசார், பாண்டியனை கைது செய்தனர்….
The post தொழிலாளி அடித்து கொலை appeared first on Dinakaran.