×

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறினார் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி..!!

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறியுள்ளார். மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் நீடிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் லாலிகாவின் பொருளாதார விதிமுறைகள் புதிய ஒப்பந்தத்திற்கு தடையாக இருப்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என கிளப் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தன் 13 வயதில் பார்சிலோனா கிளப்பில் இணைந்த மெஸ்ஸி, 34 வயதில் கிளப்பில் இருந்து வெளியேறி இருக்கிறார். பார்சிலோனா கிளப் தலைவர் இடையே பிணக்கு ஏற்பட்டதால் கடந்த ஆண்டே மெஸ்ஸி கிளப்பில் இருந்து வெளியேறுவதாக இருந்தது. மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடிய 21 ஆண்டுகளில் 810 போட்டிகளில் பங்கேற்று 683 கோல்கள் அடித்திருக்கிறார். அத்துடன் 10 முறை லா லிகா சாம்பியன், 7 முறை கோபாட்டல் ரே சாம்பியன், 4 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம், 3 முறை கிளப் உலகக்கோப்பையை அவர் வென்றிருக்கிறார். பார்சிலோனா அணிக்காக கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்ஸி திடீரென விலகி உள்ளதாக வெளியான அறிவிப்பு மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா கிளப் ரசிகர்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறினார் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி..!! appeared first on Dinakaran.

Tags : Lionel Messi ,Barcelona ,Argentina ,Messi ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...