×

குமரி எல்லையில் கடும் கெடுபிடி: கேரளாவில் இருந்து வருகிறவர்களுக்கு கட்டாய சளி பரிசோதனை..!

களியக்காவிளை: கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் குமரிக்கு வரும் பயணிகள் அனைவரிடமும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் களியக்காவிளையில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து சளி பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தேசிய அளவில் பாதிக்கப்படுவோரில் 50 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இதனால் எல்லை மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து உள்ளன. அதன்படி தமிழகத்தில் குமரி மாவட்டம் உள்பட கேரள எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்த தமிழகத்திற்குள் வரும் அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி குமரி எல்லையில் இன்று முதல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக களியக்காவிளை செக்போஸ்ட்டில் கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே செக்போஸ்ட் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2 கவுண்டர்கள் அமைத்து சளிபரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் மேலும் 4 கவுண்டர்கள் என்று மொத்தம் 6 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு கேரளாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. செக்போஸ்ட்டில் போலீசார் வாகன ேசாதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். எல்லையை கடந்து வரும் அனைவரிடமும் 2 தடுப்பூசி போட்ட சான்றிதழ், ஆர்பிசிஆர் பரிசோதனை சான்று, குமரி மாவட்டத்திற்கு வருவதற்கான காரணம் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த பின்னரே உள்ளே வர அனுமதிக்கின்றனர். இதனால் குமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. களியக்காவிளை செக்ேபாஸ்ட்டில் கடும் கெடுபிடி இருப்பதால் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் பிற செக்போஸ்ட்டுகள் வழியாக குமரி மாவட்டத்திற்குள் வர தொடங்கியு உள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே கேரள எல்லையில் உள்ள அனைத்து செக்போஸ்ட்டுகள் மற்றும் இணைப்பு சாலைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எந்த வழியாக எல்லையை கடந்த வந்தாலும் அனைவரையும் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

The post குமரி எல்லையில் கடும் கெடுபிடி: கேரளாவில் இருந்து வருகிறவர்களுக்கு கட்டாய சளி பரிசோதனை..! appeared first on Dinakaran.

Tags : Kumari Border ,Kerala ,GALIAKAVLE ,RTPCR ,Kumari ,Corona ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...