×

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடைப்பிரிவில் அரை இறுதியில் துருக்கி வீராங்கனை புஷெனாசிடம் லவ்லினா தோல்வியடைந்தார். அரையிறுதி போட்டியில் 5  – 0 என்ற கணக்கில் லவ்லினாவை துருக்கி வீராங்கனை புஷெனாஷ் வீழ்த்தினார்.  ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3வது இந்தியர் லவ்லினா ஆவார்….

The post டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா..!! appeared first on Dinakaran.

Tags : Lovelina ,Tokyo Olympic Boxing Tournament ,Tokyo ,Tokyo Olympics ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்