×

ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பெயின்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், திருமணத்துக்கு முன் ரவுடியாக வலம் வந்தபோது, ஆவடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, கடந்த 5ம் தேதி இரவு யோகேஸ்வரன் வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு மர்ம கும்பல் சுற்றி வளைத்து, வீச்சரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து  ஓடியது. இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தீவிரமாக விசாரித்தனர். இதில், கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக முன்விரோத தகராறில் ரவுடி யோகேஸ்வரனை மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி யோகேஸ்வரன் கொலை வழக்கு தொடர்பாக, நேற்று காலை தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்த ஷாம் (எ) ஷாம் விக்டர் தாஸ் (18) என்ற வாலிபரை 10வது நபராக போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Yogeswaran ,Pottur, Vallivelan ,Avadi ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!