×

தொடரும் விபத்துகளை தவிர்க்க ஓஎம்ஆர் சாலையில் இரும்பாலானதடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: ஓஎம்ஆர் என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சாலை நடுவே தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இந்த  விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க சாலை நடுவே உயரமான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருப்போரூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 அடி உயரத்தில் இரும்பாலான சாலை தடுப்பு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், வாகன ஓட்டிகள் வைத்த தொடர் கோரிக்கையால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணியை, டெண்டர் எடுத்த தனியார் ஒப்பந்ததாரர் சரியான முறையிலும், தரமான முறையிலும் இரும்பு தகடுகளை அமைக்க வேண்டும் என்றனர்….

The post தொடரும் விபத்துகளை தவிர்க்க ஓஎம்ஆர் சாலையில் இரும்பாலானதடுப்பு அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : OMR ,Mamallapuram ,Mahabalipuram road ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...