×

கீர்த்தி சுரேஷின் நட்புக்காகவே நடித்தேன்: பூர்ணா

துபாய்: பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழிலதிபர் ஷனித் ஆசிஃப் அலியை காதல் திருமணம் செய்த பிறகு துபாயில் குடியேறியுள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணா, இந்த மாதம் குழந்தை வரவை எதிர்பார்ப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.  கடந்த மார்ச் 30ம் தேதி நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்த ‘தசரா’ என்ற பான் இந்தியா படத்தில், சமுத்திரக் கனியின் மகனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மனைவி கேரக்டரில் பூர்ணா நடித்திருந்தார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதுபோன்ற மிகச்சிறந்த படத்தில், நானும் ஒரு பகுதியாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். பான் இந்தியா படத்தில் நடித்ததையும் பெருமிதமாக உணர்கிறேன். ‘தசரா’ படக்குழுவினருடன் நான்  இருந்த ஜாலியான தருணங்களை எல்லாம் ‘மிஸ்’ செய்கிறேன் என்றாலும், இப்படத்தில் எனது தோழி கீர்த்தி சுரேஷின் உண்மையான நட்புக்காக மட்டுமே நடித்தேன்’  என்று சொன் னார்.

Tags : Keerthy Suresh ,Poorna ,
× RELATED ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ்