×

வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: தலைமறைவு ஆசாமிக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் குப்பம்மா சத்திரத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (52). இவருக்கு, திருவள்ளூர் நேதாஜி சாலையில் வசித்து வந்த சலாவுதீன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். அப்போது ஜானகிராமனின், மகனுக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக சலாவுதீன் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2019 ஜூலை மாதத்தில் ஜானகிராமன், கல்வி துறையில் வேலையில் சேப்பதற்காக சலாவுதீனிடம் ரூ.8 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர், வேலை வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் ஜானகிராமன், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சலாவுதீன் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூடப்பட்டு இருக்கிறது. அவரது செல்போனில் தொடர்பு கொண்டால் அவர் எடுக்காமல் தட்டிக்கழித்து உள்ளார். புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் தலைமறைவாக உள்ள சலாவுதீனை வலைவீசி தேடி வருகிறார்….

The post வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: தலைமறைவு ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kaiwandur ,Kuppamma ,Janagraman ,Tiruvallur Netaji Road ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி