×

மீன்கடை தகராறில் 2 பேருக்கு உதை: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் ஊராட்சி, சின்ன கொக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா (50). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இருவரும் சுண்ணாம்புகுளம் பஜார் நடைபாதையில் மீன்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடைபாதையில் மீன்கடை நடத்துவதற்கு இடம் பிடிப்பதில் நேற்று பார்வதிக்கும் ராஜாவுக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் மீன் வியாபாரி ராஜாவுக்கு ஆதரவாக மற்றொரு ராஜா (36), அரசு (30), ஜெகன் (36) ஆகிய 3 பேரும் பார்வதியின் கணவர் சேகர் (60), பிரகாஷ் (32) ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசில் பார்வதி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன், ராஜா, அரசு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post மீன்கடை தகராறில் 2 பேருக்கு உதை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Parvathi ,Chinna Koku Palayam ,Chinnamkulam Panchayat ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...