- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- சென்னை
- அமைச்சர்
- மா'ம்
- சுப்ரமண்யன்
- மா. சுப்பிரமணியன்
சென்னை: இன்னும் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 1.83 கோடி தடுப்பூசிகள் அரசு சார்பில் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இன்று மாலை 5.42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழ்நாடு வர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். ஜூலை மாதத்தில் 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் ஒருவர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 1 கோடி கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் தெரியப்படுத்தவில்லை என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்….
The post 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.