×

திண்டுக்கல் சிறுமலை சந்தையில் பலாப்பழம் சீசன் தொடங்கியது: வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை சந்தையில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பழம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் அருகே உள்ளது சிறுமலை. இந்த மலையில் பலா, வாழை, எலுமிச்சை, அவரை, சௌசௌ, பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளை மழை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். முக்கனிகளில் பலாவும் வாழையும் இந்த மலையில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விலையும் பலாப்பழத்திற்கு தனி மகத்துவம் உண்டு. பலாப்பழம் இனிப்பு சுவை மட்டுமல்லாமல் அதனுடன் ஒரு புளிப்பு சுவையும் கலந்து இருக்கும். இனிப்புடன் கூடிய புளிப்பு சுவை கலந்து இருப்பதால் இந்த பழத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. சிறுமலையில் விளையக்கூடிய பலாப்பழம் திண்டுக்கல் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வெளியூர்களில் உள்ள தங்களின் உறவினர்களுக்கும் வாங்கி கொடுத்து மகிழ்கின்றனர். சிறுமலை பலா பழத்தின் சீசன் ஜூலை மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு இருக்கும். கடந்த மாதம் வரை கொரோனா  தாக்கத்தினால் போக்குவரத்து இல்லாத காரணத்தால் பலா பழங்களை கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. வெளி மாவட்ட வியாபாரிகளும் வரவில்லை. தற்போது சிறுமலை பலாப்பழ சீசன் துவங்கி உள்ளது. சிறுமலை சந்தைக்கு 200 முதல் 500 பலாப்பழங்கள் வரக்கூடிய இடத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்திலேயே 2000 காய்களுக்கு மேலாக வருகைதந்து உள்ளது. இதனால் 200 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்பனை கூடிய ஒரு பலாபழம், வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 50  ரூபாய்க்கு விற்பனை ஆகிறது….

The post திண்டுக்கல் சிறுமலை சந்தையில் பலாப்பழம் சீசன் தொடங்கியது: வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dindigul Sirumalai ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...