×

உறவுமுறை பெண்ணால் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: பியுஷ் மிஸ்ரா பகீர் தகவல்

மும்பை: ‘உறவுமுறை பெண்ணால், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்’ என்று, பியுஷ் மிஸ்ரா பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘தில் சே’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர், பியுஷ் மிஸ்ரா (60). தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமுராய்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருகிறார். இசை அமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுது வது, நாடகங்களில் நடிப்பது என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது சுயசரிதையை ‘தும்ஹாரி அவுகாத் க்யா ஹை பியுஷ் மிஸ்ரா’வில் எழுதியுள்ளார்.  அதில் பியுஷ் மிஸ்ரா கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவுமுறை பெண்ணால் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்.

அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அப்பெண்ணை நான் பழிவாங்க விரும்பவில்லை. செக்ஸ் என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அதனுடனான முதல் அனுபவம் நன்றாக இருக்க வேண்டும். இல்லை என்றால், அது உங்களை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்திவிடும். அதுபோல் என் வாழ்க்கையில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவமானது, என் வாழ்நாள் முழுவதும் எனக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது. அதிலிருந்து வெளியேற பல ஆண்டுகளானது. யாரையும் பழிவாங்கவோ, காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Piyush Mishra Bhagir ,
× RELATED அக்கரன் விமர்சனம்