உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வினோபா நகர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வகுமார் (26). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியில் ஒரு முதியவர் வசிக்கிறார். இவரது பராமரிப்பில் 17 வயது சிறுமி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமியுடன், செல்வகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில், ஆசை வார்த்தை கூறிய அவர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், தற்போது சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த முதியவர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
The post சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.