×

செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் பலி

வருசநாடு : வருசநாடு அருகே, தர்மராஜபுரம் மலைப்பகுதியில் செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் பரிதாபமாக பலியானது.வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (37), கூலித்தொழிலாளி. இவர், 25க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மலைப்பகுதியில் வெள்ளாடுகளை மேய்த்தார். மதிய வேளையில் சாப்பிடுவதற்காக ஊருக்குள் வந்தார். அந்த வேளையில் மலைப்பகுதிக்கு வந்த செந்நாய்கள் வெள்ளாடுகளை துரத்தி கடித்துள்ளது. இதில் 15 வெள்ளாடுகள் பரிதாபமாக பலியானது. தகவல் அறிந்து கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் கடமலைக்குண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘செந்நாய்கள் கடித்து 15 ஆடுகள் இறந்ததால் சிதம்பரத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு நிவாரணம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Dharmarajapuram ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...