×

பெற்றோருக்கு சிலை ரஜினி அமைத்தார்

சென்னை: தனது பெற்றோர் வாழ்ந்த ஊரில் அவர்களுக்காக சிலை அமைத்திருக்கிறார் ரஜினிகாந்த். கிருஷ்ணகிரி, நாச்சிக்குப்பத்தில் தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் ரஜினியின் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாகக் கூறுப்படுகிறது. ‘பெற்றோர் வாழ்ந்த ஊரில் சிலைகள் அமைப்பதும் நினைவு மண்டபம் அமைப்பதும் ரஜினியின் விருப்பமாக இருந்தது. இதை அவர் இப்போது பூர்த்தி செய்து வருகிறார். அடுத்தகட்டமாக நினைவு மண்டபமும் ரஜினி கட்டுவார்’ என ரஜினிக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...