×

அல்கொய்தா தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு உபி.யில் தற்கொலை படை தாக்குதல் சதி முறியடிப்பு: வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த இருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 2 பேர் சிக்கினர்.   உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்பு  படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, லக்னோ உள்ள ககோரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீட்டைஅதிரடிப்படை வீரர்கள் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். இதில், வீட்டில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அங்கு பதுங்கி இருந்த மினாஜ் அகமத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், ஜான்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த மசிரூதீன் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிப்பொருட்கள், வெடிகுண்டாக பயன்படுத்தப்படுவதற்கான குக்கர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய இடங்களில் இவர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. 2 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்  முறியடிக்கப்பட்டு உள்ளது.கான்பூரிலும் ஊடுருவல்லக்னோவில் சிக்கிய 2 தீவிரவாதிகளிடமும் நடத்தப்பட்ட  விசாரணையில், இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பில்  மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், தங்களின் தீவிரவாத அமைப்பை சேர்ந்த மேலும்  பலர் லக்னோ, கான்பூரில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி இருப்பதாக இவர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர். இதனால், லக்னோ, கான்பூரில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது….

The post அல்கொய்தா தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு உபி.யில் தற்கொலை படை தாக்குதல் சதி முறியடிப்பு: வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Al-Qaeda ,Lucknow ,Uttar Pradesh ,Uttar Pradesh… ,UP ,Dinakaran ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு...