×

பொன்னியின் செல்வனில் நடிக்காதது ஏன்?: அமலா பால் பதில்

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கு நடிகை அமலா பால் பதிலளித்தார்.மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். இந்த வேடத்துக்கு முதலில் பேசப்பட்டவர் அமலா பால். அவருக்கு ஆடிஷனும் நடந்தது. ஆனால் படத்தில் அவர் நடிக்கவில்லை. இதுகுறித்து அமலா பால் கூறியது: பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவில்லை என சொல்வதை விட, அந்த படத்தை நான் தவறவிட்டேன் என்றுதான் கூற வேண்டும். அதுவும் ஒரு முறையல்ல, இரண்டு முறை. இந்த படத்துக்காக மணிரத்னம் என்னை நடிக்க கேட்டார். இதையடுத்து ஆடிஷன் நடந்தது. அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன். 

இதையடுத்து அதில் நடிப்பதிலிருந்து பின்வாங்கியபடி இருந்தேன். காரணம் அப்போது மன அழுத்தம் காரணமாக நான் பாதிப்பில் இருந்தேன். படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் மணிரத்னம் நடிக்க அழைத்தார். அப்போது, இந்த படத்தில் நான் நடிக்க முடியாத சூழலில் இருக்கிறேன், மனரீதியாக இந்த கேரக்டருக்கு நான் தயாராக முடியவில்லை என்பதை சொன்னேன். இப்படித்தான் இந்த பட வாய்ப்பை இழந்தேன். நமக்கென என்ன விதிக்கப்பட்டதோ அதுதான் நமக்கு கிடைக்கும். வாய்ப்புகள் கிடைக்கும்போதும் தவறும்போதும் இதைத்தான் நான் எண்ணிக்கொள்வேன். இவ்வாறு அமலா பால் கூறினார்.

Tags : Bonny ,Amala Paul ,
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்