×

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பாடினார் வாணி ஜெயராம்

சென்னை: தமிழ், தெலுங்கு உள்பட இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர், வாணி ஜெயராம் (76). சிறந்த பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ள அவர், கடந்த 20 வருடங்களாக சினிமாவில் பாடுவதை நிறுத்தி இருந்தார். அவ்வப்போது இசை கச்சேரிகளில் மட்டும் பாடி வந்தார். இந்நிலையில், தற்போது இமான் இசையில் திரைப்படம் ஒன்றில் வாணி ஜெயராம் பாடியுள்ளார். ஐ.பி.முருகேஷ் இயக்கும் ‘மலை’ என்ற படத்துக்காக அவர் பாடிய ஒரு  பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதை யுகபாரதி எழுதியுள்ளார். புதிய பாடகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் இமான், தற்போது சீனியர் பாடகிக்கும் வாய்ப்பளித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Vani Jayaram ,
× RELATED பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பேரவையில் இரங்கல்