×

திருக்கனூர் பகுதியில் கனமழை அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருக்கனூர் : திருக்கனூர் பகுதியில் அறுவடைக்கு தாயராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தன.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே கைக்கிளப்பட்டு பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இவை தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல் வயலில் தண்ணீர் புகுந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்குகின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, விவசாயத்துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருக்கனூர் பகுதியில் கனமழை அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Tirukanur ,Dinakaran ,
× RELATED ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை