×

காஸ் சிலிண்டர் விலை 300 சதவீதம் அதிகரிப்பு தமிழக மக்களின் கஷ்டம் ஒன்றிய அரசின் காதில் விழவில்லை : கவர்னரிடம் மகளிர் காங்கிரஸ் புகார்

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், ஜோதிமணி எம்பி, மாவட்ட தலைவர் முத்தழகன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா ஆகியோர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் குறைந்த நிலையிலும் கூட பெட்ரோலிய பொருட்கள் விலை, அரசின் வருவாயைப் பெருக்க வேண்டுமென வேண்டுமென்றே ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் ஒன்றிய அரசின் காதில் விழவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் கஷ்டங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காஸ் சிலிண்டர் விலை 300 சதவீதம் அதிகரிப்பு தமிழக மக்களின் கஷ்டம் ஒன்றிய அரசின் காதில் விழவில்லை : கவர்னரிடம் மகளிர் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,Women's Congress ,Chennai ,Mahla ,Congress ,Chief Prosecutor ,Suda ,Senior Leader ,Thirunavukarasar ,Jhothimani MP ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...