×

எம்எல்ஏ பொதுமக்களிடம் குறை கேட்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற  உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடியாக  தீர்வு காணும்படி பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவிக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர்கள் திருமழிசை தி.வே.முனுசாமி, பூவை எம்.ரவிக்குமார், நிர்வாகிகள் ஜெ.மகாதேவன், வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், ஆர்.கருணாநிதி, மு.சுரேந்தர், கங்காதரன், பன்னீர்செல்வம், கோபால், இளங்கோவன், ஜான்மேத்யூ, நாகராஜ், மோகன், சண்முகம், வினோபா, கோபு, கங்காதரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post எம்எல்ஏ பொதுமக்களிடம் குறை கேட்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Tiruvallur ,Poontamalli ,A.Krishnaswamy ,Tirumashisai ,Municipality ,
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி கைது