×

வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த அய்யபாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (20). இவர் தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜதுரை வீட்டிலிருந்து இரவு பணிக்கு புறப்பட்டார். இவர், அண்ணனூர் ரயில் நிலையம், கார்ஷெட்  பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவரை கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த அரை சவரன் மோதிரம், விலை உயர்ந்த செல்போன், ரூ.10ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர், அவர்கள் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலமாக வழிப்பறி செய்தவர்களை தேடி வருகின்றனர்….

The post வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Rajadurai ,Bharti Nagar, Ayyappakkam ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை...