×

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய பாடல்

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டரில், ‘நமது நாட்டை சேர்ந்த திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடல் உருவாகியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். ஒன்றிய அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடலை அனன்யா பாடியுள்ளார். நிர்மிகா சிங், சிஷிர் சமந்த், அனன்யா பாடல் எழுதியுள்ளனர். இந்தியில் உருவான இப்பாடல், ‘தி இந்தியன் வே’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் நாளை வெளியாகிறது….

The post ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய பாடல் appeared first on Dinakaran.

Tags : AR Rahman ,Olympics ,Chennai ,Tokyo Olympics ,A.R. Rahman ,Olympic Games ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!