×

பாதிப்பை விட குணமடைவோர் அதிகரிப்பு 3,367 பேருக்கு கொரோனா: 64 பேர் பலி

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,51,844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,06,848 ஆக உள்ளது. இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து நேற்று 3,704 பேர் நேற்று குணடைந்தனர். அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,39,576 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 100க்கும் கீழ் குறைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 பேர் மட்டுமே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், 18 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 46 பேர் அரசு மருத்துவமனைகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை சிகிச்சை பலனின்றி 33,196 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 34,076 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறனர். நேற்று 26 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்திருந்தது. சென்னையில் பாதித்தோரின் எண்ணிக்கை 196 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post பாதிப்பை விட குணமடைவோர் அதிகரிப்பு 3,367 பேருக்கு கொரோனா: 64 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of People's Welfare ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...