பாலா இயக்கதில் வெளியான நந்தா, பிதாமகன் படங்கள் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க படங்களில் நடித்தனர். தற்போது சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்க உள்ளார். இதில் ஜோதிகாவும் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை தனித்தனி கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார்.