×

பேராசிரியர் வேலைக்காக 30 லட்சம் பெற்ற மகளிர் அணி: திண்டிவனம் மாஜி கவுன்சிலர் மகன் ஓபிஎஸ்சிடம் பேசிய ஆடியோ

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகன் ஓபிஎஸ்சிடம் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது தாயார் திண்டிவனம் நகராட்சியில் 1வது வார்டு கவுன்சிலராக இருந்தவர். இவரிடம், அதிமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக நெல்லை தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த சொர்ணா கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் ஐயப்பன் ரூ.30 லட்சம்  பணம் கொடுத்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி சொர்ணா,  பேராசிரியர் வேலை வாங்கி தரவில்லை. அதிமுக தோல்வி அடைந்த நிலையில் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இது குறித்து ஐயப்பன், ஓபிஎஸ் உதவியாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தொலைபேசியை எடுத்து ஓபிஎஸ் பேசவே அவரிடம் ஐயப்பன் பிரச்னைகளை கூறுகிறார். அதற்கு ஓபிஎஸ், வரவு செலவு கணக்கை எல்லாம் என்னிடம் ஏன் கூறுகிறாய், போலீசில் புகார் கொடு என்று கூறியுள்ளார். அதற்கு ஐயப்பன், புகார் கொடுப்பதற்கு முன் சொர்ணாவிடம் கேட்டுவிட்டு கொடுக்கலாம் என அய்யா கூறினார் என்கிறார். அய்யா என்றால் யாரு.. என ஓபிஎஸ் கேட்கிறார். உடனே அவர் சுதாரித்து கொண்டு ஏதோ சமாளிக்கிறார். அதற்கு ஓபிஎஸ் கொடுத்தவங்க கிட்டே தான் பேசுனும். என் கிட்டே ஏன் சொல்றீங்க. என் பெயரை கூறியது தப்பு என்று கூறிவிட்டேன். நீங்கள் புகார் கூறுங்கள் என கூறி முடித்துவிடுகிறார். இவ்வாறு அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. கட்சியில் மாவட்ட நிர்வாகியிடம் வேலை கேட்டு அவரது கட்சிக்காரர்  பணம் கொடுத்து ஏமாந்ததை ஓபிஎஸ்சிடம் கேட்டதற்கு அவர் அலட்சியமாக புகார் கொடு என கூறிய ஆடியோ  தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post பேராசிரியர் வேலைக்காக 30 லட்சம் பெற்ற மகளிர் அணி: திண்டிவனம் மாஜி கவுன்சிலர் மகன் ஓபிஎஸ்சிடம் பேசிய ஆடியோ appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,OPSC ,AIADMK ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!