×

தமிழகத்தில் 2வது அலை ஊரடங்கால் கொரோனா 3,867ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தில் நேற்று  1,57,791 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 72 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,57,791 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,865 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து நேற்று 4,382 பேர் நேற்று குணடைந்தனர். கொரோனா உயிரிழப்பு 172 பேர் மட்டுமே நேற்று உயிரிழந்தனர். இதில், 18 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 54 பேர் அரசு மருத்துவமனைகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை சிகிச்சை பலனின்றி 33,005 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 35,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறனர். நேற்று 28 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்திருந்தது. சென்னையில் பாதித்தோரின் எண்ணிக்கை 222 ஆக குறைந்துள்ளது. மேலும், சென்னையில் 5 பேர், தஞ்சாவூர் 8, சேலம் 7, கோவை 6, திருச்சி 6 பேர் என 72 பேர் உயிரிழந்துள்ளனர்….

The post தமிழகத்தில் 2வது அலை ஊரடங்கால் கொரோனா 3,867ஆக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : 2nd wave of lockdown in ,Tamil Nadu ,Chennai ,2nd wave of lockdown in Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...