×

ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட மகேஷ்பாபு

மகேஷ்பாபு நடித்துள்ள சர்க்காரு வாரி பட்டா படம் வருகிற மே 12ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் புரமோசனில் கலந்து கொண்டு வரும் மகேஷ்பாபு ஒரு நிகழ்வில் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட தகவலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒருமுறை, நான் என் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன், அப்போது இரண்டு பெண்கள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டனர்.

நான் குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் இது. இங்கு என்னை தொல்லை செய்யாதீர்கள என்று கூறி மறுத்துவிட்டேன். அவர்கள் சோகத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள். அப்போது ஒரு நண்பர் என்னிடம் வந்து, அந்த பெண்கள் இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று கூறினார். அதைக்கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், உடனே அவர்களை சந்திக்க சென்றேன். அப்போது ஷங்கர் அவர்களுடன இருந்தார். அவரிடம் மன்னிப்பு கோரினேன்.

அப்போது,ஷங்கர் ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மகள்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறீ்ர்கள் என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது அதே நேரதில ஒரு பெரிய இயக்குனரின் மகள்கள் மிகவும் சாதாரணமாக இருந்தது ஆச்சர்யமாகவும் இருந்தது. என்றார்.

Tags : Maheshbabu ,Shankar ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...