அரண்மனை 3 படத்திற்கு பிறகு சுந்தர்.சி தனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து, இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கதாநாயர்கள்களாக நடிக்கிறார்கள்.இவர்களுக்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர்,ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன்,சம்யுக்தா ஷண்முகம் ,திவ்யா தர்ஷினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது .கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். கலகலப்பு பாணியிலான காமெடி படமாக உருவாகிறது.