×

சினிமாவில் 10 ஆண்டுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா படத்தின் மூலம் நடிகர் ஆனாார். சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சினிமாவில் பத்தாண்டுகள்... நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்.

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும் என் படங்களில் பணியாற்றி அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Sivakarthikeyan ,
× RELATED நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட...