- முதல்வர்
- ஸ்டாலின்
- ஈ.சி.ஆர் சாலை
- மாமல்லபுரத்தில்
- திமுக
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- மு.கே ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- தின மலர்
மாமல்லபுரம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இசிஆர் சாலையில் சுமார் 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 3 மாத காலமாக சைக்கிகள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை முட்டுக்காட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கோவளம், திருவிடந்தை, வட நெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், அங்குள்ள தனியார் ஓட்டலில் சற்று நேரம் ஓய்வெடுத்தார். இதனையடுத்து, சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். முட்டுக்காட்டில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் மாமல்லபுரம் நோக்கி பயணித்தபோது, வழியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும், கட்சித்தொண்டர்களும் அவரை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். இதை பார்த்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமடைந்து சிரித்த முகத்துடன் பயணித்தார்….
The post முதல்வர் ஸ்டாலின் இசிஆர் சாலையில் சைக்கிள் பயணம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.